புதுச்சேரி

நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தி: நமச்சிவாயம் பேச்சு

தினமணி

நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தி என மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் கூறினார்.
 புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை பட்டாசு வெடித்து, கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி கொண்டாடினர்.
 காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்தியாவை மதச் சார்பற்ற நாடாக்கவும், அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாக வாழும் உத்திரவாதத்தையும் காங்கிரஸ் கட்சியால்தான் தர முடியும். ஏழைகள் பொருளாதார வளர்ச்சி பெற காங்கிரஸ் துணை நிற்கும்.
 ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அருமை, பெருமைகளை மக்களிடம் கட்சித் தொண்டர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். மதச் சார்பற்ற நாடாக உருவாக்கும் லட்சியத்தோடு காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதே நோக்கத்தில், கொள்கையில் தற்போதும் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
 ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் நாட்டு மக்களுக்காகவே உள்ளனர். காங்கிரஸ் தலைவர்களால்தான் தீவிரவாதம் வேரறுக்கப்படும். நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்திதான் என்றார்.
 அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன், விஜயவேணி, முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, பொதுச் செயலாளர் ஏகேடி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT