புதுச்சேரி

புதுவை வானொலியில் 25-இல் பிரதமரின் உரை ஒலிபரப்பு

DIN

புதுவை அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடியின் மனதின் குரல் (மன்கிபாத்) உரை வரும் 25-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
 இது குறித்து புதுவை வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் அருணா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் மோடி மாதம்தோறும் மனதின் குரல் என்னும் தலைப்பில் பொதுமக்களுக்காக உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி புதுவை வானொலி நிலையம் மூலம் மாதம்தோறும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
 இந்த மாதத்துக்கான மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழுவதும் அகில இந்திய வானொலி மூலம் வரும் 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் உரையின் தமிழாக்கம் அதே தினத்தில் புதுவை வானொலியில் இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் எனத் தெரிவித்துள்ளார் அருணா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

ராயன் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா!

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT