புதுச்சேரி

மீனவர் தினம்: சிறந்த தொழிலாளர்கள் கெளரவிப்பு

DIN

உலக மீனவர் தினத்தையொட்டி சிறந்த தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
 புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு காலாப்பட்டு தொகுதியில் தனி நபராக சென்று மீன்பிடிதொழிலை சிறப்பாக செய்து வரும் மீனவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசு வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த கண்ணன், சின்ன காலாப்பட்டைச் சேர்ந்த ஜெயக்குமார், பிள்ளைச் சாவடியைச் சேர்ந்த மலையாளத்தான், சின்னப்பன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் உத்திராடம், அமைப்பாளர் குமார், துணைத் தலைவர் கண்ணன், துணைச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் உதயன், நிர்வாகிகள் சரவணன், வாசுதேவன், குப்புராஜி, ஆனந்த், குப்பன், தாஸ், சிங்காரவேலர், ஆட்டோ சங்கத் தலைவர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT