முகப்பு
புதுச்சேரி

பள்ளி மாணவர்களுடன் இணைந்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 10:01 AM
பகிர்:

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, செப். 1 -ஆம் தேதி முதல் அக். 31- ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. 2019- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு இந்தப் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, 18 வயது நிறைவடைந்தோர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் புதுவை ஆட்சிப் பரப்பில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 
இந்த நிலையில், புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் புதுவை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களுக்கு விண்ணப்பப் படிவத்தை வழங்கினர். 
முதல் முறையாக புதுவையில்தான் தேர்தல் துறை மாணவர்களுடன் இணைந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளை வீடு வீடாகச் சென்று மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.