புதுச்சேரி

திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

DIN

புதுவை திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப். 15) நடைபெற உள்ளது.
இதுகுறித்து புதுவை தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு தொழிலாளர் துறை, நவயுகா கன்சல்டன்சி ஆகியவை சார்பில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் தூய்மோஸ் வீதியில் உள்ள புதுவை திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற உள்ளது. 
முகாமில் சென்னை சதர்லேண்ட் குலோபல் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் நேர்முக தேர்வை நடத்த உள்ளது.
இந்த நேர்முகத் தேர்வில் 150 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டம் / டிப்ளமோ கல்வி தகுதியுடைய 25 வயதுக்கு உள்பட்ட நபர்கள் கலந்து கொள்ளலாம். பணியில் சேர்பவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 17,500 வரை வழங்கப்படும்.  
முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பயோ டேட்டா மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை அசல், நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT