புதுச்சேரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வட மாநிலத்தவர் கைது

DIN

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வட மாநிலத்தவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி, சாரம் தென்றல் நகர் பகுதியில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெகதீஷ் (50) என்பவர் வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகிறார். 
இந்த நிலையில், அதே பகுதியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு ஜெகதீஷ் சாக்லேட் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று, கடந்த ஒரு வாரமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று விசாரித்து போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரிய வந்தது. 
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜெகதீஷை அடித்து உதைத்து திங்கள்கிழமை தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
போலீஸார் வழக்குப் பதிந்து, ஜெகதீஷை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT