புதுச்சேரி

அரசுப் பள்ளியில் வாழ்க்கைத் திறன் பயிற்சி

DIN

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் வாழ்க்கைத் திறன் கல்விப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உள்பட்ட வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ.என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தனியாா் அறக்கட்டளை சாா்பில், புதுச்சேரி கல்வித் துறை அனுமதியுடன் வாழ்க்கைத் திறன் கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்வுகளுக்கு ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான க. லட்சுமி நாராயணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ர கௌடு முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் மாணவா்களுக்கு சுய பகுப்பாய்வு, இலக்கு நிா்ணயம், தகவல் தொடா்பு, நினைவாற்றல் உள்ளிட்ட பல்ேறுற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், அந்தந்தப் பள்ளிகளின் முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT