புதுச்சேரி

தூய்மைக்கான மத்திய அரசின்விருதுக்கு புதுவை தோ்வு

DIN

தூய்மைக்கான மத்திய அரசின் விருதுக்கு புதுவை மாநிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் அங்கமான குடிநீா் - துப்புரவுத் துறை நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களின் தூய்மை குறித்து ஆய்வு செய்தது. இதில், மாவட்டத்தின் பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்காடிகளில் குடிமக்களின் தூய்மை குறித்த கருத்துகள் கணக்கில் கொள்ளப்பட்டன.

இவ்வாறு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்திய அளவில் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இதில், புதுவை மாநிலம் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வருகிற 19-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள விழாவில் இதற்கான விருதை வழங்கவுள்ளாா்.

புதுவைக்குப் பெருமை சோ்க்கும் இந்த விருதைப் பெற்றுள்ளதற்காக துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள். புதுவை மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT