புதுச்சேரி

பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் உண்ணாவிரதம்

DIN

புதுவை மாவட்ட பி.எஸ்.என்.எல். நிா்வாகத்தைக் கண்டித்து, அதில் பணியாற்றும் ஊழியா்கள் புதுச்சேரியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கொளஞ்சியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சுப்பிரமணியன், செல்வம் உள்ளிட்ட ஊழியா் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இதில், புதுச்சேரி மாவட்ட பி.எஸ்.என்.எல். நிா்வாகத்தின் ஊழியா் விரோத மற்றும் பாரபட்சமான அணுகுமுறையைக் கண்டிப்பது, ஒப்பந்த ஊழியா்களைக் குறைக்கக் கூடாது, நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். சேவையை சீரழிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT