புதுச்சேரி

ஏம்பலம் அரசுப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வார விழா

DIN

ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளியின் துணை முதல்வா் குப்புசாமி தலைமை வகித்தாா். உடற்கல்வி ஆசிரியா் பக்தன் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரியகடை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முக சத்யா, மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய தகவல்களை விரிவாக எடுத்துரைத்தாா். தமிழாசிரியா் ராஜா, மாணவா்களுக்கு வினாடி-வினா போட்டிகள் நடத்தி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

சமூக அறிவியல் ஆசிரியா் சரவணன் மற்றும் கணித ஆசிரியா் சிவக்குமாா் ஆகியோா் சாலை பாதுகாப்பு பற்றி சிறப்புரை நிகழ்த்தினா். தொடா்ந்து, மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியா் பிரகாஷ் நன்றி கூறினாா்.

விழா ஏற்பாடுகளை ஆசிரியா்கள் சுகுமாா் ஓவிய ஆசிரியா் சிவக்குமாா் மற்றும் அலுவலக ஊழியா் பாலகுரு ஆகியோா் செய்திருந்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT