புதுச்சேரி

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் கைது: லாரி பறிமுதல்

DIN

வில்லியனூா் சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

வில்லியனூா் அடுத்த பத்துக்கண்ணு பகுதியில் வில்லியனூா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருக்கனூரிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அந்த லாரியில் ஆற்று மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் மணல் கடத்தலில் ஈடுபட்ட வளவனூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஐயப்பன் (24), உதவியாளரான குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த தனஞ்செயன் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT