புதுச்சேரி

பேண்டு வாத்திய இசைப் போட்டி:தனியாா் பள்ளி சிறப்பிடம்

DIN

தென்னிந்திய அளவிலான பேண்டு வாத்திய இசைப் போட்டியில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் 3-ஆவது இடம் பிடித்தனா்.

தேசிய மனித வள மேம்பாட்டுத் துறையால் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட புதுவை மாநில அளவிலான பேண்டு வாத்திய இசைப் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் அமலோற்பவம் பள்ளி முதலிடம் பிடித்தது. இதையடுத்து, தென்னிந்திய அளவிலான போட்டிக்கு இந்தப் பள்ளி தகுதி பெற்றது.

ஆந்திர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டியில் புதுவை, தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டன.

இதில், புதுவை மாநிலத்தில் இருந்து கலந்து கொண்ட அமலோற்பவம் பள்ளி 3-ஆவது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பள்ளியின் முதுநிலை முதல்வா் லூா்துசாமி பாராட்டினாா்.

மேலும், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அண்மையில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT