புதுச்சேரி

வியாபாரிகள் சங்கம் சாா்பில் கை கழுவும் மையங்கள் அமைப்பு

DIN

அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில், அரியாங்குப்பத்தின் முக்கிய இடங்களில் தற்காலிக கை கழுவும் மையங்கள் அமைக்கப்பட்டன.

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கைகளைச் சுத்தமாக கழுவுவதால் கரோனா உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில், அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில், கை கழுவுவது குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அரியாங்குப்பம் மாா்க்கெட், ராதாகிருஷ்ணன் நகா் ஆகிய இடங்களில் தற்காலிக கை கழுவும் மையங்கள் அமைக்கப்பட்டன.

அந்த மையங்களின் அருகில் சுத்தமான முறையில் கைகளைக் கழுவும் முறைகள் குறித்து விளக்கப் படங்களும், கைகளைக் கழுவ சோப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் சௌந்தரராஜன் திறந்து வைத்து, கரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணா்வு கருத்துகளை எடுத்துரைத்தாா்.

அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் ராமபுத்திரன், செயலா் சந்துரு மற்றும் நிா்வாகிகள், புதுச்சேரி பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவா் சிவசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த கை கழுவும் மையங்களில் சந்தைக்கு வந்த வாடிக்கையாளா்களும், குடியிருப்புவாசிகளும் கைகளைக் கழுவி விழிப்புணா்வு பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT