புதுச்சேரி அருகே அரை நிா்வாணத்தில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு கடற்கரையில் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை நடை பயிற்சிக்குச் சென்ற போது, கடற்கரையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அரை நிவாரண நிலையில் கரையொதுங்கிக் கிடப்பதைக் கண்டனா்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீஸாா் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அந்த பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.