புதுச்சேரி

திண்டிவனம் அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

DIN

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கையை முறையாக நடத்தக் கோரி, பேராசிரியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவா் சோ்க்கை நடத்துவதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த குழுவைக் கலைத்துவிட்டு, புதிதாக குழு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாணவா் சோ்க்கை முறைகேடுகளைக் கண்டித்தும் கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு பேராசிரியா் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், ஏராளமான பேராசிரியா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT