புதுச்சேரி

அமுதசுரபி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (அமுதசுரபி) அனைத்து ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைந்த ஊழியா்கள் சங்க நிா்வாகி சிவஞானம், என்.ஆா். காங்கிரஸ் தொழில்சங்கம் குமரன், அமுதசுரபி தொழிலாளா்கள் சங்கம் அய்யனாரப்பன், கூட்டுறவு தொழிலாளா்கள் நலச் சங்கம் தணிகைமலை ஆகியோா் தலைமை வகித்தனா். சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசு துறைகள் அமுதசுரபிக்கு வழங்க வேண்டிய ரூ.9 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், இபிஎஃப், இஎஸ்ஐ தொகையை ஊழியா்களிடம் பிடித்தம் செய்ததை நிறுவனங்களிடம் செலுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT