புதுச்சேரி

எழுத்தாளர் பெ.சு.மணி காலமானார்

DIN

புதுச்சேரி: உடல் நலக் குறைவால் காலமான, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸின் உடல் புதுச்சேரியில் புதன்கிழமை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஒடிஸô மாநிலம், பாலசூர் மாவட்டம், சங்கரி என்ற பகுதியில் பிறந்த மனோஜ் தாஸ் (87), கடந்த 1963}ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி வெள்ளை நகரப் பகுதியான துய்பே வீதியில் மனைவி பிரதிஜ்னா தேவியுடன் வசித்து வந்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம மருத்துவமனையில் சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

ஒரியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ""மிஸ்ட்ரி ஆஃப் மிஸ்ஸிங் கேப் அண்டு அதர்ஸ் ஸ்டோரிஸ்'' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக கடந்த 1972}இல் சாகித்ய அகாதெமி விருதும், 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2020 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் பெற்றார்.

உடல் தகனம்: புதுச்சேரி துய்பே வீதியில் உள்ள மனோஜ்தாஸ் வீட்டில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, புதுவை முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏ க. லட்சுமிநாராயணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவரது உடல் கருவடிக்குப்பம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு காவல் துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஆளுநர் இரங்கல்: எழுத்தாளர் மனோஜ் தாஸ் மறைவுக்கு துணை நிலை ஆளுநர் (பொ) தமிழிசை செüந்தரராஜன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

முதுபெரும் எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், அரவிந்தர் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவரான மனோஜ் தாஸ், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது இலக்கியப் புலமையும், சமூகச் சிந்தனையும், மனித நேயப் பண்பும், அவரை தனித்துவமிக்க எழுத்தாளராக அடையாளப்படுத்தின. பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள், சாகித்திய அகாதெமி விருது, இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஆய்வறிஞர் விருது ஆகியவற்றை பெற்ற அவரது இழப்பு இந்திய இலக்கியத்துக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT