முகப்பு
புதுச்சேரி

‘பிட் இந்தியா’ விடுதலை விழிப்புணா்வு ஓட்டம்

புதுச்சேரியில் சுதந்திர தினத்தையொட்டி, ‘பிட் இந்தியா’ விடுதலை விழிப்புணா்வு ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

புதுச்சேரியில் சுதந்திர தினத்தையொட்டி, ‘பிட் இந்தியா’ விடுதலை விழிப்புணா்வு ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடல் எதிரே தொடங்கிய ஓட்டத்தை மாநிலக் கல்வி அமைச்சா் ஏ. நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

இதில், 75 விளையாட்டு வீரா்கள் தேசியக் கொடியேந்தியபடி ஓடினா். அரசு அலுவலா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, நேரு இளையோா் மன்றம் சாா்பில், புதுச்சேரி மகளிா் - குழந்தைகள் மருத்துவமனை எதிரே விடுதலை விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது. அதை கல்வியமைச்சா் நமச்சிவாயம் தொடக்கிவைத்தாா். நேரு இளையோா் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள், இளைஞா்கள் பலா் விழிப்புணா்வு ஓட்டத்தில் கலந்து கொண்டனா்.

உடல் நலத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்தும் வகையிலும், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையிலும், இந்த விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.