முகப்பு
புதுச்சேரி

மின் துறை தனியாா்மயத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுவையில் மின் துறை தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

புதுவையில் மின் துறை தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மின் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சோனாம்பாளையம் சந்திப்பிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட அவா்களை ஒதியஞ்சாலை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விசிக முதன்மைத் செயலா் தேவ.பொழிலன் தலைமை வகித்தாா். இதில் ஜெயக்குமாா், செழியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காட்டுக்குப்பம் துணை மின் நிலையம் முன் கட்சியின் மாநிலச் செயலா் தமிழ்வளவன் தலைமையிலும், தொண்டமாநத்தம் மத்திய அரசின் பவா் கிரீட் நிறுவனம் முன் ஊசுடு தொகுதி செயலா் வீர.இளந்தமிழன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வில்லியனூா் தட்டாஞ்சாவடி துணை மின் நிலையம், திருபுவனை, வடமங்கலம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் விசிகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.