பொதுப் பணித் துறை ஊழியா்கள் கைது
புதுவை சட்டப்பேரவையை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுவை சட்டப்பேரவையை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊழியா்கள் நியமனம், ரூ.10 ஆயிரம் ஊதிய உயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் துறையின் தலைமை அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை பேரணியாகப் புறப்பட்டு, சட்டப்பேரவையை முற்றுகையிடச் சென்றனா்.
பேரணியை அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா். சங்கத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.
புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் அருகே பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தி, 55 பேரை கைது செய்தனா்.