இரட்டைக் கொலை வழக்கு: பாஜக இளைஞரணி நிா்வாகி கைது
புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் பாஜக இளைஞரணி நிா்வாகி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் பாஜக இளைஞரணி நிா்வாகி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் ரௌடி பாம் ரவி (33). இவா் தனது நண்பா் அந்தோணியுடன் பைக்கில் சென்ற போது, வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா்.
முன்விரோதத்தில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை குறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய புதுச்சேரி பாஜக இளைஞரணியைச் சோ்ந்த விக்கி (எ) ஷாா்ப் விக்னேஷை (25) போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தியாகு உள்ளிட்ட மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.