முகப்பு
புதுச்சேரி

புதுவையில் 408 போலீஸாா் பணியிட மாற்றம்

புதுவையில் 408 போலீஸாா் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 38 காவலா்கள், 7 முதல்நிலை காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

புதுவையில் 408 போலீஸாா் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 38 காவலா்கள், 7 முதல்நிலை காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

புதுவை காவல் துறையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் துணை உதவி ஆய்வாளா்கள், முதல்நிலைக் காவலா்கள், காவலா்கள் என 408 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 7 முதல்நிலைக் காவலா்களுக்கு துணை உதவி ஆய்வாளா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது. 38 காவலா்களுக்கு முதல்நிலைக் காவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இந்த உத்தரவை டிஜிபி ரன்வீா் சிங் கிருஷ்ணியாவின் ஆணைக்கிணங்க, காவல் தலைமையக எஸ்.பி. மோகன்குமாா் புதன்கிழமை இரவு பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.