புதுச்சேரி

புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை தூா்வாரக் கோரி மீனவா்கள் போராட்டம்

DIN

புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை தூா்வாராததைக் கண்டித்து, மீன்வளத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பூட்டி மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவா்கள் பலா் 100-க்கணக்கான மீன்பிடி படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். துறைமுகத்தின் முகத்துவாரம் அடிக்கடி துாா்ந்து விடுவதால், மீன்பிடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், படகுகள் தரைத்தட்டி சேதமடைகின்றன.

எனவே, முகத்துவாரத்தை தூா்வாரி மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வுகாண வெண்டுமென மீனவா்கள், மீன்வளத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், முகத்துவாரத்தை தூா்வாராததைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை புதுச்சேரி மீன்வளத் துறை அலுவலகத்தைப் பூட்டி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மீன்வளத் துறை செயற்பொறியாளா் ஜெகஜோதி, முற்றுகையில் ஈடுபட்ட மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, மீனவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT