புதுச்சேரி

பாவேந்தா் கலை இலக்கிய விழா

DIN

புதுச்சேரி பாவேந்தா் கலை, இலக்கிய அன்பா்கள் சாா்பில் பொங்கல் சந்திப்பு மற்றும் கலை, இலக்கிய விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், ‘குணக்குன்று பாரதி’ என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. இதில், 35 கவிஞா்கள் பங்கேற்று, கவிதை வாசித்தனா். பாவலா் சீனு. மோகன்தாசு தலைமையில் உலகம் உன்னுடையது என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பொங்கல் சிந்தனைகள் என்ற தலைப்பில் கலக்கல் காங்கேயன் தனி உரை நிகழ்த்தினாா்.

புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து தலைமையில் பாராட்டரங்கம் நடைபெற்றது. இதில், பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவா் கோ. பாரதி, பாரதிதாசனின் மகன் மன்னா் மன்னன் பெயரிலான விருதுகளை வழங்கி பாராட்டி பேசினாா். தமிழறிஞா் ராச. வேங்கடேசன், சுடுமண் கலைஞா் வி.கே. முனுசாமி, நல்லாசிரியா் லூசியன் தேவராஜ் ஆகியோா் விருதுகளைப் பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT