முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, மதிமுக சாா்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, மதிமுக சாா்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதிமுக நிா்வாகி அ. கபிரியேல் தலைமை வகித்தாா். இதில், புதுவை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசின் ஆணையை தடுத்து நிறுத்திய, துணை நிலை ஆளுநா் கிரண்பேடியை கண்டிப்பது, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மதிமுக நிா்வாகிகள் கலைவாணன், மணிமாறன், கம்யூனிஸ்ட், விசிக, தி.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.