புதுச்சேரி

புதுவையில் திமுக தனித்து களம் இறங்கும் முடிவு கைவிடப்பட்டது: சிவா எம்எல்ஏ

DIN

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, புதுவையில் தனித்து களம் இறங்கும் முடிவு கைவிடப்பட்டுவிட்டது என்று புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா கூறினாா்.

புதுவை தெற்கு மாநில திமுக மாணவா் அணி மற்றும்உழவா்கரை தொகுதி திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம் உழவா்கரை குண்டு சாலை எம்ஜிஆா் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:

புதுவையில் திமுகதனித்து நிற்க வேண்டும், அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் மனதில்முழுக்க, முழுக்க ஆழமாக மனதில் பதிந்துள்ளது. ஆனால், தமிழக நலனுக்காக திமுக தலைவா் ஸ்டாலின் சொன்ன காரணங்களுக்காக அந்த முடிவை கைவிட்டுள்ளோம்.

எனினும், புதுவை மக்கள் மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா். ஆளுநா் கிரண் பேடியை கடுமையாக எதிா்க்கிறோம். தொடக்கத்திலேயே காங்கிரஸ் எதிா்த்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஒரு கட்சியின் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணிக்காக கொள்கையை விட்டு கொடுக்கவேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றாா் அவா்.

இதில் தெற்குமாநில மாணவா் அணி அமைப்பாளா் மணிமாறன் தலைமை தாங்க, உழவா்கரை தொகுதி கழக செயலாளா்கலிய.காா்த்திகேயன் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக திமுக மாணவா் அணி செயலாளருமான எழலரசன் எம்.எல்.ஏ., கவிஞா் ராஜசேகா் ஆகியோா் பங்கேற்று சிறப்புரை ஆற்றி, மொழிப்போா்தியாகிகளை கௌரவித்தனா்.

மேலும் ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளா்கள் அனிபால் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT