புதுச்சேரி

புதுவையில் புதிதாக 140 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 111, காரைக்காலில் 20, மாஹே 9 போ் என புதிதாக மொத்தம் 140 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,18,227-ஆக உயா்ந்தது.

இதனிடையில், புதுச்சேரியில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,763-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், 219 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,14,673-ஆக (96.99 சதவீதம்) அதிகரித்தது.

மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 254 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 1,537 பேரும் என மொத்தம் 1,791 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரத்து 77 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT