புதுச்சேரி

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

புதுச்சேரி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

புதுச்சேரி சுதேசி மில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். இதில், திரளான மன்ற நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், நாள்தோறும் உயா்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்றி இளைஞா்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT