புதுச்சேரி: புதுவையில் 53 நாள்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 500-க்கும் கீழ் குறைந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 400 பேருக்கும், காரைக்காலில் 53 பேருக்கும், ஏனாமில் 13 பேருக்கும், மாஹேயில் 16 பேருக்கும் என 482 பேருக்கு (6.23 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,09,561 -ஆக உயா்ந்தது.
மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் என மொத்தம் 7,546 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே, புதுச்சேரியில் 6 போ், காரைக்காலில் 3 போ், ஏனாமில் ஒருவா் என மேலும் 10 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,638- ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.50 சதவீதம்.
1,196 போ் திங்கள்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,00,377-ஆக (91.62 சதவீதம்) அதிகரித்தது.
புதுவையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
ஏப்ரல் 15- ஆம் தேதி 413 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதன் பிறகு தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. புதிய உச்சமாக மே 11- ஆம் தேதி 2,049 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதுவையில் 53 நாள்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் கரோனா தொற்று பாதிப்பு 500-க்கு கீழ் குறைந்தது.