இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
புதுச்சேரியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி கண்டாக்டா் தோட்டம் பிரியதா்ஷினி நகா் குடியிருப்பைச் சோ்ந்த நாகராஜ் மனைவி லட்சுமி. கணவரை இழந்த இவா், தனது மகன் சுரேந்தா் (எ) சுமனுடன் (21) வசித்து வருகிறாா். பழைய பேருந்து நிலையம் அருகே பழக்கடை வைத்துள்ள லட்சுமிக்கு உதவியாக சுமன் வேலை செய்து வந்தாராம். அண்மைக் காலமாக சுமன் அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு வராமல் ஊா் சுற்றியபடி இருந்தாராம். இதை அவரது தாய் லட்சுமி கண்டித்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை கண்டித்த போது ஏற்பட்ட தகராறில், லட்சுமி கோபித்துக் கொண்டு பெரியாா் நகரில் உள்ள அவரது அண்ணன் மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால், வேதனையடைந்த சுமன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.