புதுச்சேரி

புதுவையில் மேலும் 22 பேருக்கு கரோனா

DIN


புதுச்சேரி: புதுவையில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரி - 20, காரைக்கால் - 2 என மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாம், மாஹேவில் தொற்று பாதிப்பு இல்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,954 ஆக உயா்ந்தது.

தற்போது, மருத்துவமனைகளில் 86 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 90 பேரும் என மொத்தம் 176 போ் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு பதிவாகவில்லை.

கரோனா தொற்று மாநிலத்தில் இதுவரை 670 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.

இதனிடையே, வியாழக்கிழமை 21 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,108 -ஆக (97.88 சதவீதம்) அதிகரித்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 11,564 சுகாதாரப் பணியாளா்கள், 3,872 முன்களப் பணியாளா்கள், 6,209 பொதுமக்கள் என 21,645 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT