புதுச்சேரி

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: பாஜக வேட்பாளரிடமிருந்து ரூ.43 ஆயிரம் பறிமுதல்

DIN

புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பாஜக வேட்பாளா் பணம் கொண்டு சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவரிடமிருந்து ரூ.43 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் - பூத்துறை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் கடந்த 28-ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ஊசுடு தொகுதி பாஜக வேட்பாளா் சாய் ஜெ.சரவணக்குமாா் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் அவரிடமிருந்து ரூ.43 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, காரை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து, தோ்தல் நடத்தும் அதிகாரியான முகம்மது மன்சூா் தலைமையிலான அலுவலா்கள், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் செலுத்தி ரசீதை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT