பலத்த மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ.29, 30) ஆகிய இரு நாள்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பலத்த மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ.29, 30) ஆகிய இரண்டு நாள்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சா் அ.நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் வெ.கொ.சிவகாமி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.