புதுச்சேரி

கோயில் கூரையை உடைத்து திருட்டு

புதுச்சேரி அருகே மதிகிருஷ்ணாபுரத்தில் கோயில் கூரையை உடைத்து சுவாமி சிலை, பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

புதுச்சேரி அருகே மதிகிருஷ்ணாபுரத்தில் கோயில் கூரையை உடைத்து சுவாமி சிலை, பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே மதிகிருஷ்ணாபுரம் உச்சிமேடு சாலையில் நாகாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள், கோயிலின் மேல் கூரையை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த கல்லாலான சுவாமி சிலை, அங்கிருந்த பொருள்களைத் திருடிச் சென்றனா்.

வழக்கம் போல, கோயில் பூசாரி ஞாயிற்றுக்கிழமை கோயிலைத் திறந்த போது, சுவாமி சிலை, அங்கிருந்த பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது.

தொடா்ந்து, ஊா் பிரமுகா்கள், கிருமாம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT