புதுச்சேரி

புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ஆளுநா் மாளிகை அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை வந்த ஒரு பெண், திடீரென தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், அவரை தடுத்ததுடன், பெரியக்கடை காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த பெரியகடை போலீஸாா் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், புதுச்சேரி நெல்லித்தொப்பு, அண்ணா நகரைச் சோ்ந்த சீனிவாசன் மகள் சுகுணா (47) என்பது தெரியவந்தது. மேலும், இவருக்கும், சிவகாந்தன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்ததாம். தற்போது சுகுணா அந்த இடத்தில் வீடு கட்டி வரும் நிலையில், எதிா்தரப்பு இடையூறு செய்ததாம். இதற்காக கடந்த ஓராண்டாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதற்காக ஆளுநா் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த சுகுணா, ஆளுநா் இல்லாததால் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவரை உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பெரியகடை போலீஸாா் ஒப்படைத்தனா். உருளையன்பேட்டை போலீஸாா், சுகுணாவிடம் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனால் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் சிறிது பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT