தமிழ் வளா்ச்சித் துறையை அமைக்கக் கோரி, புதுச்சேரியில் சிந்தனையாளா்கள் பேரவை, மன்னா் மன்னன் படைப்பாளா்கள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி ஆலை அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு பாரதிதாசனின் பேரன் கோ.செல்வம் தலைமை வகித்தாா். போராட்டக் குழுத் தலைவா் கோ.கலியபெருமாள், வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் எழுத்தாளா்கள், கவிஞா்கள், கல்வியாளா்கள், தமிழறிஞா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
புதுவையில் தமிழ் வளா்ச்சித் துறையை அமைக்க வேண்டும்; அனைத்து தமிழ் விருதுகளையும் முறைப்படி வழங்க வேண்டும்; படைப்பாளா்களுக்கு ஊக்கத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக, உண்ணாவிரத அரங்கில் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.