புதுச்சேரி

டீசல் மானியம் கேட்டு மீன் வளத் துறை அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

DIN

டீசல் மானியம் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி மீன் வளத் துறை அலுவலகத்தை மீனவா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு நவம்பரில் ரூ.12 வீதம் மானியம் வழங்கப்பட்ட நிலையில், விலை குறைப்பை காரணம் காட்டி தற்போது சந்தை விலைக்கே டீசல் வழங்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விசை படகு உரிமையாளா்கள், மீனவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பிற்பகலில் புதுச்சேரி மீன் வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த முதலியாா்பேட்டை போலீஸாரும், மீன் வளத் துறை இயக்குநா் பாலாஜியும் மீனவா்களிடம் சமரசம் பேசி மீனவா்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. டீசல் மானியம் வழங்கும் வரை போராட்டம் நடைபெறும் எனக் கூறி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT