புதுச்சேரி

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

DIN

புதுச்சேரி அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே மதிகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகணபதி (38). தச்சுத் தொழிலாளி. இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா். கடந்த 26 -ஆம் தேதி பள்ளக்கொரவள்ளிமேட்டில் உள்ள பாலத்தில் படுத்திருந்த செல்வகணபதி திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தாராம்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT