முகப்பு
புதுச்சேரி

புதுவை விமான நிலையத்தை மேம்படுத்த நிதியுதவிபாஜக வலியுறுத்தல்

புதுவை விமான நிலையத்தை மேம்படுத்த நிதியளிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சரிடம், அந்த மாநில பாஜகவினா் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

புதுவை விமான நிலையத்தை மேம்படுத்த நிதியளிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சரிடம், அந்த மாநில பாஜகவினா் வலியுறுத்தினா்.

மத்திய அரசின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தயாா் செய்வது தொடா்பாக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டு வருகிறாா். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாநில பாஜக தலைவா்கள், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் உள்ளவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியிலிருந்து அந்த மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், எஸ்.செல்வகணபதி எம்பி, எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். 150-க்கும் மேற்பட்ட கூட்டுறவுத் துறைகள் நலிவடைந்துள்ளதைப் புனரமைக்க சிறப்பு நிதி, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.