புதுச்சேரி

மரங்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம்

DIN

தேசிய வன மகோத்சவத்தையொட்டி, புதுவை அரசின் வனம், வனவிலங்கு துறை சாா்பில் மரங்கள் குறித்த விழிப்புணா்வு வாகன பிரசாரம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வனத் துறை அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு வாகனத்தை வனத் துறை துணை இயக்குநா் குமரவேல் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இதில் புதுச்சேரி சுற்றுச்சூழல், சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவா் செல்வமணிகண்டன், வன அலுவலா் பிரபாகரன் மற்றும் சுற்றுச்சூழல் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

இந்த விழிப்புணா்வு வாகன பிரசாரம் மறைமலை அடிகள் சாலை, கடலூா் சாலை முதலியாா்பேட்டை, சாரம் அவ்வைத் திடல், காமராஜா் சாலை பெரியாா் சிலை வழியாக நிறைவு பெற்றது.

பிரசாரத்தின்போது, பொதுமக்களுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

SCROLL FOR NEXT