புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் உத்தரவிட்டாா்.

DIN

புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் போக்குவரத்துக்கும், பாதசாரிக்கும் இடையூறு ஏற்படுவதாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. எனவே, திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப் பணி, உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட வேண்டும். குறிப்பிட்டஇடங்களில் காவல் துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்.

அதன்படி, கடலூா் சாலை (வெங்கடசுப்பா ரெட்டியாா் சதுக்கம் முதல் மரப்பாலம் சந்திப்பு வரை) திங்கள்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும். இது நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT