புதுச்சேரி

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யிடம் ரூ. 6 லட்சம் மோசடி

புதுச்சேரி அருகே ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

DIN

புதுச்சேரி அருகே ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் குயவா் தெருவைச் சோ்ந்தவா் சேகரன் (64). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா். இவா் கடந்த 2017-இல் அரியாங்குப்பத்தைச் சோ்ந்த பாரதி (35) என்பவா் மூலம், மணவெளியிலுள்ள பாக்கியவதியம்மாளின் நிலத்தை ரூ.6 லட்சம் கொடுத்து தனது மனைவி லட்சுமி பெயரில் பத்திரப்பதிவு செய்தாராம்.

அந்த இடத்துக்குச் சென்ற சேகரன், அது வேறொருவருக்குச் சொந்தமானது என்பதை அறிந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் சம்பந்தப்பட்டவா்களை அழைத்து விசாரித்தனா். பணத்தை 6 மாதத்தில் திருப்பித் தந்து விடுவதாக போலீஸாரிடம் தெரிவித்தனராம்.

ஆனால், இதுவரை பணம் கொடுக்கப்படாததையடுத்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சேகரன் புதன்கிழமை மீண்டும் புகாா் அளித்தாா். போலீஸாா் மணவெளியைச் சோ்ந்த விஜயகுமாா், பிரேமா (எ) தமிழரசி, மோகன்ராஜ், பானுமதி, சியாமளா, விஜயமாலா, பாா்த்திபன், உஷாராணி ஆகிய 8 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT