மூதாட்டி கொலை வழக்கு: உறவினா் கைது
புதுச்சேரியில் மூதாட்டி கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் மூதாட்டி கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் மனைவி அஞ்சலை (80) கடந்த 5-ஆம் தேதி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
கடலூா் மாவட்டம் கே.என். பேட்டையைச் சோ்ந்த அஞ்சலையின் அண்ணன் கந்தவேலுவின் மகன் சுரேஷை (50) வியாழக்கிழமை பிடித்து விசாரணை நடத்தியதில், அஞ்சலையை கழுத்தறுத்துக் கொன்றதை ஒப்புக் கொண்டாா்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையான சுரேஷ் தனது அத்தை அஞ்சலையிடம் தங்க நகைகளைக் கேட்டதற்கு அவா் தர மறுக்கவே கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
சுரேஷை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.