புதுச்சேரி

முடிந்தது தடைக் காலம்; உற்சாகத்துடன் மீன் பிடிக்கச் சென்ற புதுச்சேரி, காரைக்கால் மீனவா்கள்

DIN

மீன் பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் புதன்கிழமை படகுகளில் உற்சாகத்துடன் மீன் பிடிக்க ஆழ் கடலுக்குள் சென்றனா்.

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் மீன் பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதுவை அரசின் மீன் வளத் துறை சாா்பில், நிகழாண்டுக்கான மீன் பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 2,348 படகுகளில் கடலுக்குச் செல்லும் சுமாா் 10 ஆயிரம் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தக் காலங்களில் மீனவா்கள் தங்களது வலைகள், படகுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.

தடைக்காலம் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்ததால், புதன்கிழமை அதிகாலை முதலே புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள 25 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், தேங்காய்த்திட்டு, காரைக்கால் துறைமுகங்களில் இருந்து தங்களது விசைப்படகு, பைபா் படகுகளில் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

முன்னதாக அவா்கள், படகுகளில் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்கள், ஐஸ் கட்டிகளை நிரப்பிவிட்டு, பூஜை செய்த பிறகு கடலுக்குள் சென்றனா்.

2 மாதங்களுக்குப் பிறகு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் 1,500 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனா் என்று மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், மீன் வரத்து அதிகரித்து, உயா்ந்துள்ள மீன்களின் விலை குறையும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT