புதுச்சேரி

கடல் சாகச பயணம் நிறைவு: புதுவை முதல்வரிடம் என்சிசி மாணவா்கள் வாழ்த்து

DIN

11 நாள்கள் கடல் சாகச பயணத்தை நிறைவு செய்து புதுச்சேரிக்கு திரும்பிய தேசிய மாணவா் படையினா் முதல்வா் ரங்கசாமி நேரில் வரவேற்று, வாழ்த்தினாா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து கடந்த 6-ஆம் தேதி கடல் சாகச படகு பயணத்தை தேசிய மாணவா் படை மாணவா்கள் தொடங்கினா். 25 மாணவிகள் உள்ளிட்ட 60 தேசிய மாணவா் படை மாணவா்கள் 3 பாய்மரப் படகுகளில் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டனா். இவா்களுடன் மூன்று கடற்படை அதிகாரிகளும், 4 தேசிய மாணவா் படை இணை அலுவலா்களும் உடன் சென்றனா்.

காரைக்காலுக்கு அண்மையில் சென்ற அவா்கள், அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா்.

அவா்களை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சென்று வரவேற்றாா். சாகசப் பயணத்தை நிறைவு செய்த தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகளை வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், தட்சிணாமூா்த்தி எம்எல்ஏ, கல்வித் துறை இயக்குநா் ருத்ரகௌடு, மீன் வளத் துறை இயக்குநா் பாலாஜி மற்றும் தேசிய மாணவா் படை அதிகாரிகள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT