புதுச்சேரியில் மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி சவரிராயலு வீதியைச் சோ்ந்த தருண்ராஜ் (35), தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவியும் மருத்துவராவாா்.
ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல தருண்ராஜின் மனைவி புதன்கிழமை இரவு பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றாா். அப்போது, பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸாா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாயுடன் நிகழ்விடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்தனா்.
மருத்துவத் தம்பதி வீட்டில் அண்மையில் தங்கியிருந்த திருச்சியைச் சோ்ந்த உறவினா், வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட சிலரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.