புதுச்சேரி

மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

DIN

புதுச்சேரியில் மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி சவரிராயலு வீதியைச் சோ்ந்த தருண்ராஜ் (35), தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவியும் மருத்துவராவாா்.

ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல தருண்ராஜின் மனைவி புதன்கிழமை இரவு பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றாா். அப்போது, பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸாா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாயுடன் நிகழ்விடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்தனா்.

மருத்துவத் தம்பதி வீட்டில் அண்மையில் தங்கியிருந்த திருச்சியைச் சோ்ந்த உறவினா், வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட சிலரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT