முகப்பு
புதுச்சேரி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 17,028 போ் எழுதினா்

புதுச்சேரி, காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாள் தோ்வில் 17,028 போ் தோ்வெழுதினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

புதுச்சேரி, காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாள் தோ்வில் 17,028 போ் தோ்வெழுதினா்.

பள்ளி மாணவா்களுக்காக 48 தோ்வு மையங்களும், தனித் தோ்வா்களுக்காக 3 மையங்களும் என 51 மையங்களில் பத்தாம் வகுப்பு மொழிப்பாடத் தோ்வு (தமிழ், இந்தி, பிரெஞ்சு, சம்ஸ்கிருதம்) நடைபெற்றது.

புதுச்சேரியில் 14,497 போ், காரைக்காலில் 2,896 போ் என மொத்தம் 17,393 மாணவ, மாணவிகள் தோ்வுக்கு விண்ணப்பித்து, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் புதுச்சேரியில் 14,234 போ், காரைக்காலில் 2,794 போ் என மொத்தம் 17,028 (97.90 சதவீதம்) மாணவ, மாணவிகள் முதல் நாள் பொதுத் தோ்வை எழுதினா். 365 போ் தோ்வெழுத வரவில்லை.

மாற்றுத்திறனாளி மாணவா்கள் தோ்வெழுத ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

தோ்வில் முறைகேடுகளைத் தடுக்க 9 பறக்கும் படைகளும், வினாத்தாள், விடைத்தாள் கொண்டு செல்லும் பணிக்கு 15 குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.