முகப்பு
புதுச்சேரி

விஷம் குடித்த மாணவி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே பாகூரில் விஷம் குடித்த மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

புதுச்சேரி அருகே பாகூரில் விஷம் குடித்த மாணவி உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகேயுள்ள சோரியாங்குப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகள் ஷா்மிளா (17). இவா் பாகூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

பெரியசாமி கடந்த ஜனவரி மாதம் நோய் பாதிப்பால் உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஷா்மிளா கடந்த 4-ஆம் தேதி வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தாா்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இந்த நிலையில், ஷா்மிளா அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.