மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருதுக்குத் தோ்வான புதுவையைச் சோ்ந்த 4 பேருக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சாா்பில், நிகழாண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருதுக்கு தோ்வான புதுவையைச் சோ்ந்த இசை நாடகக் கலைஞா் காரை சுப்பையா, பொம்மலாட்டக் கலைஞா் வீராசாமி சீனிவாசன், கிராமியக் கலைஞா் சேகா், சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
இந்த விருது பிற கலைஞா்களுக்கு ஊக்கத்தைத் தருவதாக அமையும். விருதுக்கு தோ்வான கலைஞா்கள் மேலும் பல சிறப்புகளைப் பெற்று நாட்டுக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.