புதுச்சேரி

குடிசை மாற்று வாரிய ஊழியா்கள் நூதனப் போராட்டம்

DIN

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய ஊழியா்கள் ஒற்றைக்காலில் நின்று வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பெரியாா் நகரில் உள்ள அரசு குடிசை மாற்று வாரியத்தில் 160 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒற்றைக் காலில் நின்று முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், நிலுவை ஊதியத்தை வழங்கும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT